Sunday, June 7, 2009

க‌விஞ‌ர் வாலியின் கவிதை




தன் தலையை

சீவியவனுக்கே!

தண்ணீர் தருகிறது
இளிநீ!!


http://kavingarvaali.wordpress.com/2009/03/

கவிஞர் வாலியின் கவிதைகள்



எங்கள் குடும்பம்
தமிழ்க் குடும்பம்

ஒவ்வொருவர்
ஒவ்வொர் இனம்

மாமியார்
கசடதபற

மாமனார்
ஙஞணநமன

மணவாழன்
யரலவழள

மருமகள்
நான் மட்டும்...

அவர்களுக்கு ஆகாத
அக்கனாவாக ()

அடுத்த வீட்டுத் தோழியிடம்
என் அவலத்தை சொன்னேன்
அவள் சொன்னாள்

அடியே அக்கனா
தானடி ஆயுத எழுத்து

அடுத்த நாளே
நான் ஆயுத எழுத்து
என்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்

இப்பொழுது...

மாமியார்
மாமனார்
மணவாழன்

மூவரும் என்
முந்தானைக்குள் !

கவிஞர் வாலியின் கவிதைகள்



நேற்று
என் பின்னால்
அவள்

இன்று
அவள் பின்னால்
நான்

நேற்று நான்
காதலனாக இருந்தேன்

இன்று
கணவனாக இருக்கிறேன்