Sunday, June 7, 2009

கவிஞர் வாலியின் கவிதைகள்



எங்கள் குடும்பம்
தமிழ்க் குடும்பம்

ஒவ்வொருவர்
ஒவ்வொர் இனம்

மாமியார்
கசடதபற

மாமனார்
ஙஞணநமன

மணவாழன்
யரலவழள

மருமகள்
நான் மட்டும்...

அவர்களுக்கு ஆகாத
அக்கனாவாக ()

அடுத்த வீட்டுத் தோழியிடம்
என் அவலத்தை சொன்னேன்
அவள் சொன்னாள்

அடியே அக்கனா
தானடி ஆயுத எழுத்து

அடுத்த நாளே
நான் ஆயுத எழுத்து
என்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்

இப்பொழுது...

மாமியார்
மாமனார்
மணவாழன்

மூவரும் என்
முந்தானைக்குள் !

No comments:

Post a Comment